For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம்: 4 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் பலத்தமழை பெய்துள்ளது. கன மழையில் இடி தாக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். வீடு இடிந்து சிறுவன் பலியானான்.

வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

மேலும் 48 மணி நேரங்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.மாநிலத்திலேயே அதிக அளவாக திருச்சி மணப்பாறையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்றுகனமழை பெய்தது.

தமிழகம் முழுவதும் இன்றும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.

ஆரணி அருகே விவசாயியின் மனைவியான லட்சுமி (வயது 30) இடி தாக்கி உயிரிழந்தார். சேலம் கொளத்தூர்அருகே அய்யாத்துரை என்பவரது மகள் தேவியும் இடி தாக்கியதில் உடல் கருகி பலியானார். தஞ்சை மாவட்டம்சீவலங்குறிச்சி என்ற இடத்தில் விவசாயி முருகானந்தம் என்பவரும் இடி தாக்கி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கன மழையில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுவன் பால் ஸ்டீபன்ராஜ் என்பவன்உயிரிழந்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X