அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்: உலகெங்கும் சிறப்பு வழிபாடுகள்
ராமநாதபுரம்:
அன்னை தெரசாவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகனில் அருளாளர் பட்டம்வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து 3000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், அறப்பணியாளர்களும்கலந்து கொண்டனர்.
இதன் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் 1315 வது அருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அன்னைதெரசா. அவருக்கு அருளாளர் பட்டத்தை அறிவித்த போப்பாண்டவரை அன்னையை ஏழைகளின் தாய் எனவர்ணித்தார். அன்னையின் உருவப்படமும் புனித பீட்டர் சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
போப்பாண்டவராக 2 வது ஜான் பால் பொறுப்பேற்றதன் 25 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் வேளையில்அன்னைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மேற்குவங்க மாநில பழங்குடியினப் பெண் ஒருவர் தன் புற்று நோய் தீர அன்னையைப்பிரார்த்தித்ததாகவும், இதையடுத்து நோய் குணமானதாகவும் கூறினார். இதை உறுதிசெய்தபின் இந்த அற்புதத்தைநிகழ்த்திய அன்னைக்கு அருளாளர் பட்டமளிக்க முடிவு செய்தார் போப்.
அன்னைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தேவாலயங்களில் சிறப்புப்பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் இதைப்போல சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய முறைப்படியான வழிபாடுகளும் நடந்தன. இறைவனை வாழ்த்திதமிழிலும் புனித கீதம் பாடப்பட்டது.












Click it and Unblock the Notifications