தமிழகத்துக்கு ஆண்டுக்கு 2.6 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரண்டரை கோடியைத் தொட்டுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா கூறினார்.

உள் நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.5 கோடியாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின்எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. மொத்தம் 2.6 கோடி பேர் தமிழகத்தை சுற்றிப் பார்க்கவருகின்றனர் என்றார்.

சென்னையில் சர்வதேச சுற்றுலா மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஜெயலலிதா பேசுகையில்,

தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டுள்ளது. தொன்மை மிக்க கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் தமிழ்நாட்டை அழகு மிக்கசுற்றுலாத் தலமாக ஆக்கியதோடு, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

செட்டிநாட்டை சுற்றுலாத்தலமாக மாற்றி அப் பகுதியின் கட்டடக் கலை, கலாச்சார வளத்தை வெளியுலகுக்குஉணர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சென்னைக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும்விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருடா வருடம் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளில் 30 சதவிதத்தினரை தமிழகம் ஈர்த்துள்ளது. இதற்குகாரணம், ஒரு சுற்றுலாப் பயணி எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது தான்என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+