சென்னையில் முகமூடிக் கொள்ளை: திருடிய பின் காலில் விழுந்த கொள்ளையர்கள்
சென்னை:
ஏழைகளுக்கு தானமாக வழங்கப் போவதாக கூறி பட்டுச் சேலைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல லட்சம்மதிப்புள்ள பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றுள்ளது.
சென்னை போரூரை அடுத்துள்ளது காரப்பாக்கம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சாவித்திரி அம்மாள். இவரதுகணவர் இரு வாரங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது 13-வது நாள் காரியம் நேற்று நடந்தது. இதற்காகஉறவினர்களும் வந்திருந்தனர்.
இந் நிலையில் முகமூடி அணிந்த 3 பேர் சாவித்திரி அம்மாளின் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டை உள்பக்கமாகப்பூட்டிய அவர்கள் பளபளக்கும் பட்டாக் கத்திகளைக் காட்டி உறவினர்களை மிரட்டி ஒரு அறையில் தள்ளிஅடைத்தனர்.
சத்தம் போட்டால் வெட்டிக் கொல்வோம் என மிரட்டியதால் அனைவரும் வாயை மூடி அமைதியாக இருந்தனர்.
பின்னர் சாவித்திரி மற்றும் உறவினர்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க, வைர நகைகள், வீட்டில் இருந்தபட்டுச் சேலைகளை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டது.
இதையடுத்து வெளியே கிளம்பிய திருடர்கள், சாவித்திரி அம்மாளின் காலில் விழுந்தனர்.
இதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். தங்களை ஆசிர்வதிக்குமாறு கூறிய திருடர்கள், இதை நாங்கள் எங்களுக்காகத்திருடவில்லை. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் தானம் வழங்குவதற்காக எடுத்துச் செல்கிறோம். எங்களைமன்னித்து விடுங்கள் என்று கூறி விட்டுத் தப்பிச் சென்றனர்.
பட்டப் பகலில் நடந்த இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications