ஜனனிக்காக வாதாட வந்த கபில் சிபல் !!
சென்னை:
கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நடராஜனின் தோழி ஜனனிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தினபிரபலமான வழக்கறிஞரும் எம்.பியுமான கபில்சிபல் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
மதுரையைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரமீஜா, அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சாகடத்தியதாகவும், ரூ. 1 கோடி பணம் வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மதுரை நீதிமன்றத்தில் நிராகக்கப்பட்டு விட்டன. இதையடுத்துசென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனனியின் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார். நீதிபதி கற்பகவிநாயகம் இந்த மனுவை இன்று விசாரித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா உள்பட பல விவிஐபிக்களின் வழக்குகளில் ஆஜராகி வாதாடி இருப்பவர் கபில் சிபல்.