கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் ரூ. 10 கோடி ஊழல்
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவனைகளுக்கு மருந்துகள் வாங்கியதில் ரூ. 10 கோடி வரை ஊழல்நடந்துள்ளதாகத் தெரிகிறது.
போலி பில்கள் தயாரிக்கப்பட்டு இந்த ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட கால்நடை மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் அலோபதி, சித்த,ஹோமியோபதி மருந்துகளை தமிழக அரசின மருத்துவப் பணிக் கழகம் கொள்முதல் செய்துமருத்துவமனைகளுக்கு வினியோகித்து வந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் இந்த முறை மாற்றப்பட்டது. கால்நடை மருத்துவமனைகளுக்குத் தேவையானமருந்துகளை அந்தந்த மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளே வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரம்தரப்பட்டது. வாங்கிய மருந்துக்கான பில்களை மட்டும் மருத்துவப் பணிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தால் போதும்என்று அறிவிக்கப்பட்டது.
இங்கு தான் ஊழல் ஆரம்பித்தது. மருந்துகளை கொள்முதல் செய்ய அதிகாரம் பெற்ற மாவட்ட கால்நடைத்துறைஅதிகாரிகள், போலி பில்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர்.
மேலும் மருந்துகளை சில நிறுவனங்களிடம் மட்டும் வாங்கி அவர்களுக்கு சாதமாகவும் செயல்பட்டுள்ளனர்.இதன்மூலம் அந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி வரை கமிஷனும் அடித்துள்ளனர்.
கால்நடைகளுக்கு இலவசமாக தர வேண்டிய மருத்துகளையும் படிப்படியாக பல மாவட்டங்களில் நிறுத்தியுள்ளனர்.இதன்மூலம் மருந்துகளையே வாங்காமல் வெறும் பில்கள் மட்டும் தயார் செய்து தலைமை அலுவலகத்துக்குஅனுப்பி வைத்து ரூ. 10 கோடி வரை சுருட்டியுள்ளனர்.
இந்த விவரம் தெரிய வந்ததையடுத்து துறைரீதியிலான விசாரணை நடந்தாகத் தெரிகிறது. அதில் ஊழல் நடந்ததுஉண்மை என்று தெரியவந்ததால் அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
இதன் முதல் கட்டமாக மருந்துகள் வாங்கும் உரிமை மாவட்ட கால்நடை அதிகாரிகளிடம் இருந்துபறிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மருந்துகளை மருத்துவப் பணிகள் கழகமே வாங்கி அனுப்பும் என்று புதிய உத்தரவை அரசுபிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் ஊழல் செய்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.