பண்ணையாருக்கு துப்பாக்கி கொடுத்தவர் பிகாரில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வெங்கடேச பண்ணையாருக்கு அதி நவீன துப்பாக்கியை வழங்கியதாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவரைதமிழகத்தில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ணையாருடன் தொடர்புடையவர்கள் என்று இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பண்ணையாருக்கு துப்பாக்கி வழங்கியதாக ஹேமந்த் குமார் சிங் என்பவரை தமிழக போலீசார்பிகாரில் வைத்து கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலம் முங்கீர் என்ற இடத்தில் சிங்கை, தமிழக தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அங்குள்ளநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் இன்று சிங் சென்னை கொண்டு வரப்பட்டார்
3 மாதத்தில் விசாரணை அறிக்கை:
இதற்கிடையே வெங்கடேச பண்ணையார் வழக்கை விசாரிக்கும் நீதிபதி ராமன் 3 மாதத்தில் தனது அறிக்கையைஅளிக்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications