தமிழகத்தில் தொடர்கிறது மழை: மேலும் 2 நாட்கள் நீடிக்கும்
சென்னை:
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மீது மேக மூட்டத்தை உருவாக்கியுள்ளதால் தொடர்ந்து மழை பெய்யும் என சென்னைநுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழையுடன் புயல் சின்னமும் உருவாகியிருப்பதால் கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும்கன மழை பெய்து வருகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அணைகளில் நீர் மட்டமும் வெகுவாகஉயர்ந்து வருகிறது. இந் நிலையில் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
போரூர் அருகே ஜமால் என்பவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அதில் இடி மின்னல் தாக்கியதாகவும்அதில் செல்போன் கருகியதோடு, அவரது கையிலும் காதிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருபுவனம், நத்தத்தில் அதிக அளவாக 6 செ.மீ மழையும் குறைந்த அளவாக மதுரை,அருப்புக்கோட்டை, செங்குனறம், சிவகங்கை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இன்றும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளும் வேகமாகநிரம்பி வருகின்றன. மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.