பொடாவை திருத்தினாலும் பயனில்லை: வைகோ
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அப்போதுஅவர்களின் காவலை நீதிபதி ராஜேந்திரன் வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லை கடந்த தீவிரவாதத்தைத் தடுக்கவேபொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்க இந்த சட்டத்தைத் தமிழகஅரசு பயன்படுத்தி வருகிறது.
பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடாது. முற்றிலும் இந்தசட்டத்தை வாபஸ் பெற்றாக வேண்டும்.
கூட்டணி தர்மத்திற்காகவே நான் பொடாவுக்கு ஆதரவாக வாக்களித்தேன். ஆனால் இப்போது பெரும் தவறுசெய்து விட்டதாக நினைக்கிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications