மூத்த கன்னியஸ்திரியின் கள்ளத் தொடர்பு: நேரில் பார்த்த தமிழக கன்னியாஸ்திரியை கொல்ல முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மூத்த கன்னியாஸ்திரியும், கார் டிரைவரும் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை நேரில் பார்த்த மற்றொருகன்னியாஸ்திரியைக் கொல்ல முயற்சி நடந்தது.

மூன்றாவது மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிர் பிழைத்துவிட்டாலும் கூட அவரதுதண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்தன.

கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரைச் சேர்ந்தவர் கரோலின் புஷ்பராணி(23). கன்னியஸ்திரியான இவர்ஆந்திராவிலுள்ள கொண்டரமல்லேபள்ளி என்ற இடத்தில் உள்ள விஜயாமேரி கான்வென்டில் உதவி வார்டனாகப்பணிபுரிந்து வந்தார்.

அங்கு மூத்த கன்னியாஸ்திரியாக இருப்பவர் ரெமிஜிஸ், அவருக்கும் கார் டிரைவர் கேசவன் என்பவருக்கும் நீண்டகாலமாக முறைகேடான உறவு இருந்து வருவதாகத் தெரிகிறது.

சமீபத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை கரோலின் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து கான்வென்டின செயலாளர் ரோசாரி மதரிடம் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து ரெமிஜஸிடம், ரோசாரி விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் வழக்கம்போல் காலை 5 மணிக்கு தனது அறையில் இருந்து எழுந்த கரோலின், மொட்டை மாடியில்உலர வைத்திருந்த துணிகளை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரைத் தொடர்ந்து வந்த ரெமிஜிஸூம்,டிரைவர் கேசவனும், அவரை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் கரோலினின் தண்டுவடம் உடைந்தது. இதனால் இரு கால்களும் செயலிழந்துள்ளன. இதையடுத்து அவர்சென்னை கொண்டு வரப்பட்டு விஜயா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது சென்னை அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக சென்னை மனித உரிமை ஆணையத்தில் கரோலின் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கரோலின்சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கான்வென்ட் முதல்வர் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+