தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது தீபாவளி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அதிக சத்தம் வாய்ந்த வெடிகளை வெடிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவும், போலீசாரின்உத்தரவுகளும் நேற்று காற்றில் பறந்தன.
125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் இருக்கக் கூடாது என்ற உத்தரவை பெரும்பாலானவர்கள்கடைப்பிடிக்கவில்லை.
அத்தனை வகையான வெடிகளும் சரமாரியாக வெடிக்கப்பட்டன.
நள்ளிரவு வரை நீடித்த படார், படார்:
அதே போல இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற உத்தரவும் காணாமல் போனது. நள்ளிரவுவரையிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்தன. இருப்பினும் நேற்றுவெள்ளிக்கிழமை என்பதால் ஒரு பகுதியினர் தீபாவளி கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக அமாவாசைதினமான இன்று விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் இன்றும் தீபாவளிப் பண்டிகை தொடர்கிறது.












Click it and Unblock the Notifications