கடைமடையை அடைந்தது காவிரி நீர் !
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கடைமடைப் பகுதியான நாகைக்கு வந்துள்ளதால்,நாகை மாவட்ட விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கடந்த 7ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் 11ம் தேதி கல்லணையிலிருந்துதண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் காவிரிப் பாசனப் பகுதியின் கடைசி அணையான கடைமடைஅணைக்கு வந்து சேர்ந்துள்ளது. மேலும், வெண்ணாறு பாசனப் பகுதி கால்வாய்க்கும் காவிரி நீர் சென்றுள்ளது.
இதையடுத்து கடைமடைப் பாசனப் பகுதியான நாகை மாவட்டத்தில் 52,000 ஹெக்டேர் நேரடிப் பாசன நிலங்கள்மற்றும் பிற நிலங்களில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் பெய்த நல்ல மழை காரணமாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பாசனத்தில்ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications