40 அநாதைப் பிணங்கள் ஒரே குழியில் புதைப்பு
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் கடந்த 3 மாத காலமாக வைக்கப்பட்டிருந்த 40அநாதைப் பிணங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில், கடந்த 3 மாத காலமாக இந்த பிணங்கள்வைக்கப்பட்டிருந்தன. விபத்தில் இறந்த, அடையாளம் தெரியாத இந்தப் பிணங்களைக் கேட்டு யாரும் வராததால்,இவை குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பிணங்களை சென்னை மாவட்ட அரிமா சங்கம் பெற்று கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஒரே குழியில்அடக்கம் செய்தது. இந்து, கிறிஸ்தவ, ஸ்லீம் மத சடங்குகள் செய்யப்பட்டு பிணங்கள் புதைக்கப்பட்டன.
சென்னை மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சுப்பராயுலு இதுகுறித்துக் கூறுகையில், வருடந்தோறும் இதுபோல1000 அநாதைப் பிணங்களை வாங்கிப் புதைத்து வருகிறோம். இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியாத காரணத்தால், 3 மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் வரவழைத்து மத சம்பிரதாயங்களுடன்பிணங்கள் புதைக்கப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications