விஷவாயு தாக்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கழிவு நீர்க் குழாயில் சுத்தம் செய்த இரண்டு பேர் விஷ வாயு தாக்கி முச்சுத் திணறி இறந்தனர்.
சென்னை ஆலந்தூர் எம்.டி.என். சாலையில், கழிவு நீர்க் குழாய் செல்லும் தொட்டிக்குள் இறங்கி அதில்ஏற்பட்டிருந்த அடைப்பை சிலர் சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிலிருந்து கிளம்பிய விஷ வாயு தாக்கியதில் தொட்டிக்குள் இறங்கிய 3 பேர் மயக்கமடைந்தனர்.இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் போனது.
அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் வெளியில் தூக்கினர். இதில், சுதிர், பலராம் ஆகியோர் ஏற்கனவேஇறந்திருந்தனர். நினைவிழந்த நிலையில் இருந்த மிலன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications