பொடாவின் புனிதம் காக்க வேண்டும்: வெங்கையா வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநில அரசுகள் பொடா சட்டத்தின் புனிதத்தன்மையைக் காக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதைப்பழிவாங்கப் பயன்படுத்தக் கூடாது என்று பாஜக தலைவர் வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயங்கரவாதிகளை ஒடுக்கவேபொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தை சில மாநில அரசுகள் தவறாகப் பயன்படுத்துவதாகபுகார்கள் எழுந்துள்ளன.
பொடா சட்டத்தின் நோக்கத்தை சரியான முறையில் உணர்ந்து, அதன் புனிதத்தன்மை கெடாமல் மாநில அரசுகள்பார்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்களைப் பழிவாங்க அந்த சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாதுஎன்றார் அவர்.












Click it and Unblock the Notifications