திமுக-காங்கிரஸ்கூட்டணிக்கு ரஜினி முயற்சி!
சென்னை:
காங்கிரஸ், திமுக கூட்டணி அமைவதற்கான அஸ்திவாரம் பெங்களூரில் போடப்பட்டு வருகிறது.
இக்கூட்டணியே அமைய வேண்டுமென கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும், நடிகர் ரஜினிகாந்தும் விரும்புவதால்ரஜினியே பெங்களூரில் முகாமிட்டு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருந்தாலும் எந்த நேரத்திலும் வெளியில் வரத் தயாராகத்தான்உள்ளது. மணிசங்கர ஐயர் தாக்கப்பட்ட விவகாரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புகின்றனர்.
இதற்குக் காரணம் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அதிருப்தியில்இருப்பதுதான்.பல்வேறு விஷயங்களில் கர்நாடக முதல்வருடன் மோதிய ஜெயலலிதா, சோனியாவையும்விமர்சித்ததால், அவருக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் கிருஷ்ணா உள்ளார்.
வீரப்பன் விவகாரத்தில் கிருஷ்ணாவுக்கும் கருணாநிதிக்கும் எதிராக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., தினகர் எழுதியபுத்தகமும் இவர்கள் இருவரும் நெருங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது.
அதை வைத்து இந்த இருவரையும் மடக்க முயற்சிக்கும் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக திமுக வுடன் கூட்டணிசேர கிருஷ்ணா முடிவு செய்துள்ளார். இதற்கு சோனியாவும் சம்மதித்ததையடுத்து கூட்டணிக்கான பேச்சு வார்த்தைதுவக்கப்பட்டது.
நடிகர் ரஜினி காந்தும் இக்கூட்டணி உருவாக்கத்தில் ஆர்வமாக உள்ளார். பாரதிய ஜனதாவுடன் ஜெயலலிதாநெருங்கி வருவதாலும், தமிழகத்திலுள்ள பாரதிய ஜனதாவினர் திமுகவை ஏற்றுக்கொள்ளத் தயாராகஇல்லாததாலும், காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்தால்தான் ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என ரஜினிகருதுகிறார்.
மேலும் இக்கூட்டணியால் கர்நாடகத்தில் நடக்கும் தேர்தல்களில் திமுக வுக்கு கணிசமான இடங்களைக் கேட்டுப்பெற முடியும் என கருணாநிதியும் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications