கெளரவ ரேஷன் கார்டு: 31ம் தேதியுடன் கெடு முடிகிறது
சென்னை:
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டாக மாற்றிக்கொள்வதற்கான காலக் கெடு வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்களும், வருமான வரி கட்டுபவர்களும் தங்களது ரேஷன் கார்டுகளை,கெளரவ கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தக் கார்டுகளுக்குரேஷன் கடைகளில் எந்தப் பொருளும் வழங்கப்பட மாட்டாது.
கடந்த மாதம் 30ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவதாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதிகெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. தற்போது அந்தக் கெடு முடிவடைய உள்ள நிலையில் ஏராளமாஏனார்தங்களது ரேஷன் கார்டுகளை, கெளரவ அட்டைகளாக மாற்றி வருகிறார்கள்.
கெடுவுக்குப் பிறகு கெளரவ அட்டைகளாக மாற்றப்படாத ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் வீடு வீடாக சென்றுரத்து செய்யும் பணியை மேற்கொள்வர். ரத்து செய்யப்படும் கார்டுகளுக்குப் பதில் புதிய கார்டுகள் வழங்கப்படாதுஎன்றும் ஏற்கனவே அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications