சேலம் அருகே ஜாதி மோதல்: 40 பேர் கைது
சேலம்:
சேலம் மாவட்டம் வென்னந்தூர் என்ற இடத்தில் முதலியார் மற்றும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்களிடையேஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் காயமடைந்தனர். 25 வீடுகள் தாக்கப்பட்டன. சில கடைகள், வாகனங்கள்சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக 40 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வென்னந்தூர் பகுதியில் ஏராளமான விசைத் தறி மையங்கள் உள்ளன. இவற்றை முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர். இந்த தறி மையங்களில், வேலை பார்ப்பவர்கள் வன்னியர் வகுப்பைச்சேர்ந்தவர்கள் ஆவர். இரு வகுப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கமானது.
இந்த பின்னணியில், வென்னந்தூர் கிராமத்தில் தீபாவளியன்று பட்டாசு கொளுத்துவதில் இரு ஜாதியினருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு பிரிவினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில்,பஞ்சாயத்து கவுன்சிலர் சிங்காரவேலு, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளிட்ட 7பேர் காயமடைந்தனர்.
வீடுகள், வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மோதல் குறித்து அறிந்ததும் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன்.மாணிக்க வேல் உத்தரவின் பேரில் போலீஸார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட 40பேரைக் கைது செய்தனர்.
இந்த மோதல் தொடர்பாக வென்னந்தூர், மின்னக்கல் ஆகிய கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. அங்கு ஆயுதம்ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications