அரசு தலைமைச் செயலகம் முன் வாலிபர் தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை முன்புதற்கொலை செய்து கொள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் முயற்சி செய்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. 26 வயதாகும் இவர் அரசு வேலைத் தரக் கோரி முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க சென்னை வந்தார்.ஆனால் முதல்வரைப் பார்க்க முடியவில்லை.
இதையடுத்து கோட்டை வாயில் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். போலீஸார் அவரை உடனடியாகஅரசு பொது மருத்துவனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் அவர் குணமடைந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications