தன் நாக்கைத் தானே அறுத்துக் கொண்ட நாவிதர்
ஆண்டிப்பட்டி:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சவரத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய நாக்கைத் தானேஅறுத்துக்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் ஒருசவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இச்சம்பவ தினத்தன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர்.அதன்பின் தேனி ரோட்டில் உள்ள தனது சவரக் கடைக்கு, ராஜா வந்துவிட்டார்,
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த அவர், சவரக்கத்தியால் தனது நாக்கை அத்ெதுக்கொண்டார்.
இதில் நாக்கு துண்டானதால், அவர் பேசும் சக்தியை இழந்தார், உடனடியாக அவரை மதுரை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆண்டிப்பட்டி போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்.