மேல்மருவத்தூர் அருகே பாலத்தில் விரிசல்: தென் தமிழகம்- சென்னை இடையே போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
மேல்மருவத்தூர் அருகே உலுந்தூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் விரிசல்ஏற்பட்டுள்ளதால், சென்னைக்கும் தென் தமிழகத்துக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் பாண்டிச்சேரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
நேற்றிரவு இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பாலத்தை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தென் தமிழகத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், சென்னையில்இருந்து தென் தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதனால் பாண்டிச்சேரியை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications