ரேஷன் கார்டு புதுப்பிப்பு: அரசு அறிவிப்பு
சென்னை:
மாத வருவாய் ரூ. 5000க்கும் குறைவாக உள்ளவர்களின் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி நவம்பர் மாதம்தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்களின் ரேஷன் கார்டுகள் கெளவர அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டன. மற்றவர்களின் ரேஷன் கார்டுகள் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகின்றன. இவற்றை மேலும்ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து மாத வருவாய் ரூ 5000க்கு குறைவாக உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை, நவம்பர் மாதம்முதல்டிசம்பர் மாதம் வரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் பொது விடுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதற்கெனஅமைக்கப்படவுள்ள தனி மையங்களுக்குச் சென்று கார்டுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
டிசம்பர் மாதத்தில் வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டார வழங்கல் அதிகாரியின் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகள் புதுப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications