அமெரிக்க விசா: அடுத்த ஆண்டு முதல் கைரேகை பதிவு அவசியம்
சென்னை:
அடுத்த ஆண்டு முதல் அமெரிக்கா செல்ல விசா வேண்டி விண்ணப்பவர்கள் தங்களது கைரேகைகளையும்கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
சென்னையில் இந்திய ஏற்றுயாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பேசியஅமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் தாமஸ் இதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த கைரேகைப் பதிவு உலகம் முழுவதும் உள்ளஅமெரிக்கத் தூதரகங்களில் கட்டாயமாக்கப்படும்.
விசா வேண்டி விண்ணப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தில், பயணத்தின் நோக்கம், அமெரிக்காவில்தங்கப்போகும் இடம், அங்கு தங்களுக்கு உள்ள பொருளாதாரப் பிண்ணனி ஆகிய விவரங்களைத் தெளிவாகக்குறிப்பிடவேண்டும்.
அமெரிக்கா செல்ல விரும்புவோரை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பிலும் அக்கறை காட்டவேண்டியது அவசியமாகிவிட்டது.
சென்னை தூதரகம் ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்கு விசா வழங்குகிறது. இதில் பெரும்பாலானவர்கள்சாப்ட்வேர் நிபுணர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications