ஹனிமூனுக்கு குற்றாலம் வந்த காங்கிரஸ் பிரமுகர் மனைவி கற்பழிப்பு
தென்காசி:
தேனிலவுக்காக குற்றாலம் வந்த திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் பிரமுகரின் மனைவி பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டார். இது தொடர்பாக விடுதி உரிமையாளர் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி. இவருக்கும் சுதா என்பவருக்கும் சமீபத்தில்திருமணம் நடந்தது. கடந்த 26ம் தேதி இருவரும் தேனிலவுக்காக குற்றாலம் சென்றனர். அங்கு கிட்டு என்றஆட்டோ டிரைவர் இவர்களுக்கு தனி பங்களாவைப் பிடித்துத் தந்துள்ளார்.
அன்றிரவு 11 மணிக்கு முத்துசாமி சாப்பாடு வாங்க வெளியில் சென்றார். அப்போது பங்களாவின்குத்தகைககாரரான விநாயகம் அங்கு வந்து தனியாக இருந்த சுதாவின் வாயில் துணியை வைத்து அடைத்துஅவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
நடந்ததை வெளியில் சொன்னால், நீ விபச்சாரம் செய்ததாக போலீசில் சொல்லி, உள்ளே தள்ளுவோம் என்றுமிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சுதா, நடந்ததை கணவரிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார். மறுநாள்இருவரும் குற்றாலத்தைச் சுற்றிப் பார்த்தனர்.
இதையடுத்து ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் வாங்குவதற்காக முத்துசாமி வெளியில் சென்றிருந்த போது அங்குவந்த ஆட்டோ டிரைவர் கிட்டு, சுதாவை பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது சுதா அலறியதால்அங்கிருந்தவர்கள் ஓடி வந்ததால் கிட்டு தப்பி ஓடிவிட்டான்.
இதையடுத்து சுதாவும், கணவர் முத்துசாமியும் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலத்துக்கு வந்த வெளிநாட்டுப் பெண் கற்பழிக்கப்பட்டு சர்ச்சை எழுந்ததால், காவல்துறையினர் உடனடியாக விநாயகத்தையும், ஆட்டோ டிரைவர் கிட்டுவையும் கைது செய்தனர். ஆட்டோவையும்பறிமுதல் செய்துள்ளனர்.