கலெக்டர்கள் மாநாடு: அடுத்த மாதம் சென்னையில்!
சென்னை:
வருடாந்திர இரண்டு நாள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடுசென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களின் 2நாள் மாநாடு சென்னையில் நடைபெறும். இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் மாநாடுநடைபெறவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்.
இந்த மாநாட்டின்போது முதலமைச்சரின் 15 அம்சத் திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள், பல்வேறுவளர்ச்சிப் பணிகள், மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்துவது, மண் குவாரி பிரச்சினை, டாஸ்மாக் கடைகளில்பார் வசதியை ஏற்படுத்துவது, பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகளை விநியோகம் செய்வது, ரேஷன் கார்டுபுதுப்பிக்கும் பணி, விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சார மீட்டர் பொருத்தும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறுபிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மாவட்டந்தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா தஞ்சாவூருடன் தனதுமாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள மாநாட்டைகூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ரூ. 2,942.48 கோடி மதிப்பிலான 1,34,954 புதிய திட்டங்களைதொடங்கி வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ரூ. 4,140.67 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டியுள்ளார்.