தேவர் குருபூஜை: பசும்பொன் செல்ல ஜெயா திடீர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்கிராமத்திற்குச் செல்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினம் ஆகியவற்றையொட்டி நாளை அவர்பிறந்த ஊரான பசும்பொன்னில் அமைந்துள்ள நினைவிடத்தில் குருபூஜை நடைபெறவுள்ளது.

இதில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, வி.எச்.பி. துணைத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோர்பங்கேற்கின்றனர். மேலும் பிற கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், தேவர் சமூக அமைப்பினர் கலந்துகொள்கின்றனர்.

இந் நிலையில் தானும் அங்கு செல்ல ஜெயலலிதா திடீர் என முடிவு செய்துள்ளார். காலம் காலமாக அதிமுவுக்குக்கிடைத்து வரும் தேவர் சமூகத்தினரின் வாக்குகளை தொகாடியா, மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மூலம் பா.ஜ.கவும், சுப்பிரமணியம் சுவாமியும் குறி வைத்து வரும் நிலையில்ஜெயலலிதாவின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வழக்கமாக தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளும் ஜெயலலிதா இந்த முறைகுருபூஜையிலும் பங்கேற்கிறார்.

நாளை காலை8 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ள புதிய தலைமைச்செயலகத்திற்கான பூமி பூஜையில் ஜெயலலிதா பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர் விமானம் மூலம் மதுரைசென்று பசும்பொன் செல்கிறார்.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் புதிய உத்தரவால் தலைைமச் செயலகம் கட்டுவதில் சிக்கல் வரும் என்றுஎதிர்பார்க்கப்படும் நிலையில் பூமி பூஜையை நடத்திட ஜெயலலிதா முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+