For Daily Alerts
Just In
தா.கி. கொலை வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேரிடமும் நகல் வழங்கப்பட்ட நிலையில் வழக்குவிசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அழகிரி உள்ளிட்ட 13 பேரும் இன்று மதுரை செஷன்ஸ் நீதிபதி சிவப்பிரகாசம் முன்னிலையில்ஆஜராகினர்.
அப்போது வழக்கு விசாரணை இனி 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று நீதிபதிசிவப்பிரகாசம் அறிவித்தார். மேலும், அனைவரும் அடுத்த மாதம் 12ம் தேதி மூன்றாவது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, October 29, 2003, 5:30 [IST]