கின்னஸ் சாதனை படிக்கட்டில் சிவாந்தி
லண்டன்:
ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டு தாபனத்தின் அறிவிப்பாளர் சிவாந்தி சுப்ரமணியம் தன்னுடைய கின்னஸ்சாதனை முயற்சியில் வெற்றிகரமாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
லண்டனில் உள்ள ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் அறிவிப்பாளராக வேலை பார்த்து வருபவர்சிவாந்தி சுப்ரமணியம். 123 மணிநேரங்கள் தொடர்ந்து வானொலி அறிவிப்பு செய்து கின்னஸ் சாதனை படைக்கமுடிவெடுத்து, கடந்த 25ம் தேதி காலை 10 மணிக்கு அந்த முயற்சியைத் தொடங்கிய அவர் வெற்றிகரமாகமுன்னேறிக் கொண்டிருக்கிறார்.
போட்டியின் விதிமுறைகள் யாதெனில், நேயர்களுடன் உரையாடும் போது, 50 நொடிகளுக்கு மேல் மெளனம்சாதிக்கக்கூடாது. நான்கு நிமிடங்களுக்கும் குறைவான பாடல்களையே ஒலிபரப்ப வேண்டும்.
ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கு இடையே 15 நிமிடம் ஓய்வு தரப்படும். அந்த நேரத்தில் அவர் தனது பசி மற்றும்இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஒலிபரப்பு சம்பந்தமான அனைத்து தொழில் நுட்பவேலைகளையும் அவரே கவனித்துக் கொள்ளவேண்டும்.
உலகெங்கும் தமிழர்கள் இடையறாது அவருடன் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நாளை (30ம் தேதி) பகல் 12 மணிக்கு தனது சாதனையைத் தொடுவார் சிவாந்தி.












Click it and Unblock the Notifications