For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு இதுவரை முறைப்படி விண்ணப்பிக்கவில்லை: பாலு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்ட உள்ளது குறித்து இதுவரை தங்களது அமைச்சகத்திற்கு தகவல் ஏதும்வரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். ாலு கூறியுள்ளார்.

டெல்லியில் நடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு டி.ஆர்.பாலு இன்று மாலை அணிவித்த பாலுபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நகர்ப் புறங்களில் ரூ. 50 கோடிக்கு மேலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுற்றுச்சூழல் துறைஅமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கும் இது பொருந்தும். முன் அனுமதி கோரிஇதுவரை தமிழக அரசிடமிருந்து விண்ணப்பம் ஏதும் வரவில்லை. விண்ணப்பம் வந்தால் முறைப்படி பரிசீலனைசெய்யப்படும்.

யாராக இருந்தாலும் மத்திய அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நகர்ப்புற சுற்றுச் சூழலைமாசுபடுத்துபவர், அது மாநில அரசாகவே இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது.

சாதாரணமாக, வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டுவதாக இருந்தால் கூட, அனுமதி பெறாமல் கட்ட முடியுமா? அதுபோலத்தான் இதுவும் என்றார் டி.ஆர்.பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X