மல்கானி மரணத்தில் மர்மம்: பா.ஜ.க. பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் மல்கானி மரணத்தில் மர்மம் இருப்பதாக, அம்மாநில பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் கேசவலு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக துணைப் பிரதமர் அத்வானியிடம் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திங்கள்கிழமை காலை உடல் நலம்பாதிக்கப்பட்ட மல்கானி, உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அரசு கூறுகிறது.ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே அவர் இறந்து விட்டதாக கூறி ஆளுநர் மாளிகைக்குஉடலை எடுத்துச் சென்று விட்டனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட மல்கானியை மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்காதது ஏன்? மேலும்,ஆளுநர் மாளிகையிலேயே அவர் இறந்து விட்டதாகவும், அதன் பிறகே மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் மல்கானி மரணச் செய்தியை மாலையில்தான் அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

இடைப்பட்ட நேரத்தில் என்ன நேர்ந்தது என்பதை புதுவை அரசு விளக்க வேண்டும். இதுதொடர்பாக வெள்ளைஅறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த சந்தேகம் குறித்து துணைப் பிரதமர் அத்வானியிடம் புகார்தெரிவிக்க உள்ளோம் என்றார் கேசவலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+