திருப்பதி அருகே வேன்- லாரி மோதல்: சேலத்தை சேர்ந்த 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் பலியாயினர்.
சேலத்தில் இருந்து திருப்பதிக்கு ஒரு வேன் சென்றது. அதில் 11 பேர் பயணித்தனர். திருப்பதி அருகே முங்கிலிபட்டுஎன்ற இடத்தில் எதிரே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி அந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் இருந்த 5 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலத்தகாயமடைந்தனர். ஒரு கைக் குழந்தை மிக லேசான காயங்களுடன் தப்பியது.
இதையடுத்து 5 பேரும் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2வயது குழந்தை இறந்தது.
மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இது தொடர்பாக சந்திரகிரி போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications