கோரிக்கையை ஏற்றார் ஜெ: வள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூச உத்தரவு
சென்னை:
கன்னியாகுமரி கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பூச ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இந்த திருவள்ளுவர் சிலையை தமிழக அரசு முறையாகப் பராமரிக்கவில்லை என்று பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதியும் மனம் வருந்திபேட்டியளித்திருந்ததார்.
அதில், திருவள்ளுவர் சிலையை அரசியலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல், மொழி, இனம், மதம்அனைத்திற்கும் அப்பாற்பட்ட வள்ளுவரின் சிலையை அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி பராமரிக்க தமிழக அரசுமுன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப்பூச்சு பூசுமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்துசுற்றுலாத் துறை அமைச்சர் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கின்ற முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்படமுடியவில்லை என்பது போன்ற தோற்றத்தை கருணாநிதி உருவாக்கியிருக்கிறார். இது பற்றிய உண்மை நிலவரத்தைஎடுத்துக் கூற விரும்புகிறேன்.
அது மட்டுமல்லாமல் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனப் பூச்சு பூசுதல், சிலையைச் சுற்றி கிரானைட் கற்கள்தரைத்தளம் அமைத்தல், கழிப்பிடப் பகுதிக்குத் தேவையான தண்ணீர் வசதி, புத்தகக்கடை, காபி பார், அலுவலகஅறை, காவலர் அறை ஆகிய இடங்களில் உள்ள பழைய நிழற்கூரைகளை அகற்றி புதிய வேலைப்பாடுகளுடன்நிழற்கூரைகள் அமைத்தல்,
ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த மின்சார அமைப்புகளில் இருந்த குறைபாடுகளை அகற்றி, ஒளி விளக்குகள்அமைத்தல் ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சத்தை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதாஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications