பஸ்சில் சென்ற பெண்களின் வயிற்றை கிழித்த லாரி கம்பி: ஒருவர் பலி
நாமக்கல்:
பஸ்சில் பயணம் செய்தபோது, எதிரே வந்த லாரியில் நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி பஸ்சின் ஜன்னல்வழியாக நுழைந்து, அதில் இருந்த இரு பெண்களின் வயிற்றுக்குள் புகுந்தது. இதில் ஒரு பெண் இறந்தார்.
6 மணி நேர ரண வேதனைக்குப் பின் அறுவைச் சிகிச்சை மூலம் அந்தக் கம்பி அகற்றப்பட்டு, இன்னொரு பெண்காப்பாற்றப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாலக்காடுசெல்வதற்காக நாமக்கல்லில் இருந்து அவர் பஸ்சில் சென்றார்.
நாமக்கல் மாவட்டம் சங்ககிரி அருகே பஸ் சென்றபோது எதிரே வந்த லாரி பஸ்சின் மீது உரசியது. இதில்,லாரியில் இருந்த இரும்புக் கம்பி, பஸ்சின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து இந்துமதி மற்றும் இன்னொருபெண்ணின் மீது குத்தியது.
இதில் இன்னொரு பெண் பரிதாபமாக இறந்தார். இந்துமதியின் வயிற்றைக் குத்திக் கிழித்த கம்பி அவரது இடுப்புவலியாக வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
உடனடியாக இந்துமதி தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வயிற்றில் பாய்ந்தஇரும்புக் கம்பியை டாக்டர்கள் முதலில் வெளியே எடுத்தனர். பின்னர் வயிற்றுக்குள் புகுந்திருந்த இரும்புக்கம்பியின் துண்டுகளை சுமார் 6 மணி நேரம் போராடி அகற்றினர்.
மரணத்தின் எல்லை வரை சென்ற இந்துமதி டாக்டர்களின் திறமையான அறுவைச் சிகிச்சை காரணமாக உயிர்பிழைத்தார்.












Click it and Unblock the Notifications