பொடா: திமுகவின் போராட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு
சென்னை:
பொடா சட்டத்தை நீக்கக் கோரி திமுக நடத்த உத்தேசித்திருக்கும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றுபாஜக கோரியுள்ளது.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, பொடா சட்டத்தை நீக்க வேண்டும்என்று கருணாநிதி கூறியிருப்பது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
பொடாவால் தான் கடந்த 15 மாதங்களில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்காகபோடப்பட்ட சட்டம் அல்ல. எனவே, பொடாவுக்கு எதிரான போராட்ட முடிவை கருணாநிதி மறுபரிசீலனை செய்யவேண்டும்.
பொடா தேவை என்பதை ஒத்துக் கொண்டு எங்களுக்கு முழு ஆதரவு தர வேண்டும் என்றார்.
பா.ஜ. க. தமிழகச் செயலாளரும், முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான எச். ராஜா நிருபர்களிடம்கூறுகையில்,.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கும் திமுக தன்னுடையஎதிர்ப்பை தெரிவிப்பதற்கு வேறு இடங்கள் உள்ளபோது, மக்கள் முன்னிலையில் போராட்டம் நடத்த முயற்சிப்பதுஅடிப்படையற்றது, தேவையற்றது.
பொடா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 15 மாத காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை ஆராய்ந்து, அதன்முடிவாக பொடா மறு ஆய்வுக் குழுவிற்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்துள்ளது.
அக் குழுவும் பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக உறுதியளித்துள்ளது. எனவே பொடாசட்டத்தை நீக்கத் தேவையில்லை என்றார்.
பாஜக-திமுக உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில், பாஜக தானாக எப்போதும் கூட்டணிக் கட்சிகளுடன்உறவை முறித்துக் கொள்ளாது. மற்றவர்கள் அவ்வாறு செய்தால், அதற்கு பாஜக பொறுப்பல்ல என்றார்.












Click it and Unblock the Notifications