For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை:

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

காபிப் பொடி வியாபாரம் செய்து வந்த சந்திரசேகரன் ஏராளமான கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழில்சரியாக நடக்காததால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தார்.

இதையடுத்து அறந்தாங்கிக்கு குடும்பத்தோடு சென்ற அவர் அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்.அதன் பிறகு அவர்கள் யாரும் அறையை விட்டு வரவில்லை.

சந்தேகமடைந்த விடுதி நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நான்கு பேரும் தற்கொலை செய்து பிணமாகக் கிடந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X