ஆபாச வி.சி.டி. தயாரித்த பெண் கைது!
சென்னை:
சென்னையில், ஆபாச விசிடிக்களைத் தயாரித்த மயூரி என்ற இளம் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.இரண்டாவது முறையாக அவர் சிக்கியதால் அவர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
| ஆபாச சி.டிக்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சென்னை முனியப்பன் தெருவில் ஒரு கடையில் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டு நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுவதாக வட சென்னை காவல்துறை இணை ஆணையர்சைலேந்திரபாபுவுக்கு தகவல் கிடைத்தது. |
இதையடுத்து கடை உரிமையாளர் பிரகாஷ் பன்சாலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்தவிசாரணையில், மின்ட் சிவன் கோவில் தெருவில் உள்ள வீட்டில்தான் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டுகடைக்குக் கொண்டு வரப்படுவதாக பன்சாலி தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது. அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழகான இளம்பெண் ஒருவர் இன்டர்நெட்டில் இருந்து ஆபாச வீடியோக்களை டெளன்லோட் செய்து அதை விசிடிக்களில் பதிவுசெய்து கொண்டிருந்தார்.
மேலும் பல மலையாளம், தமிழ் துணை நடிகைகள் நடித்த ஆபாச கேசட்டுகளையும் காப்பி எடுத்துக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரையும் உடன் இருந்த ஒரு தினேஷ் என்ற வாலிபரையும் போலீஸார் கைது செய்தனக். அந்தப்பெண்ணின் பெயர் மயூரி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமணமாகி கணவரைப் பிரிந்து சென்னை வந்தவர்.விசாரணையில் இவர் பன்சாலியின் கள்ளக் காதலி என்றும் தெரியவந்தது.
விசிடிக்கள் தயாரிப்பது முதல் லேபிள் ஒட்டுவது, கவர்களில் போட்டு அடுக்குவது என அனைத்துவேலைகளையும் மயூரியே செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை ஆபாச விசிடி தடுப்பு போலீசாரிடம் சிக்கியவர் இவர் என்பதும் தெரியவந்துள்ளது. பெண்என்பதால் போலீஸார் மன்னித்து விட்டு விட்டனர். தற்போது தொடர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டிருந்ததால்,மயூரியை போலீஸார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஆபாச விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.













Click it and Unblock the Notifications