கோடம்பாக்கத்தை கலக்கிய விபச்சார தடுப்பு இன்ஸ்பெக்டர் திடீர் டிரான்ஸ்பர்!
சென்னை:
விபச்சாரத்தில் ஈடுபட்ட திரைப்பட நடிகைகள், டிவி நடிகைகளை வளைத்து வளைத்துப் பிடித்த சென்னைவிபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், திடீரென வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த 2001ம் ஆண்டு முதல்இப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது காலத்தில்தான் சென்னை நகரில் விபச்சாரத் தடுப்பு படு தீவிரமாகஇருந்தது.
குறிப்பாக விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். நடிகைகள் மாதுரி,புவனேஸ்வரி, வினிதா, விலாசினி, நிஷா, சுவேதா, சிந்து, ரோஜாராணி, சித்த வைத்திய டாக்டர் ஜானகி எனஇவரிடம் சிக்கிய புள்ளிகளின் எண்ணிக்கை மிக நீளமானது.
நடிகைகள் மட்டுமல்லாது, விபச்சாரத்தில் ஈடுபட்ட வேறு பல பெண்களையும் ராஜேந்திரன் தலைமையிலானபோலீஸ் படை வளைத்துப் பிடித்துள்ளது. விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மட்டும் அல்லாது, அவர்களிடம்உல்லாசமாக இருக்க வந்தவர்களும் பிடிக்கப்பட்டனர்.
மாநகரக் காவல்துறை ஆணையர் விஜயக்குமாரின் முழு ஒத்துழைப்பும், சுதந்திரமாக செயல்படுவதற்கு முழுஅனுமதியும் வழங்கப்பட்டதால் தனது விபச்சார வேட்டையின்போது பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேரையும்வளைத்துப் பிடித்தார் ராஜேந்திரன்.
இவரது தீவிர வேட்டைகாரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட வந்த பல நடிகைகள் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.பலர் சென்னையை விட்டே தற்காலிகமாக ஓடி விட்டனர். பெங்களூர், ஹைதராபாத்தில் போய் தங்களது உடல்வியாபாரத்தை இந்த நடிகைகள் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவிலிருந்து ராஜேந்திரன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். இப்போது அவர்அயனாவரம் காவல்நிலைய சட்டம்- ஒழுங்குப் பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்ற முடியாது என்ற விதியின் அடிப்படையில் ராஜேந்திரன்மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது இடத்தில் சென்னை வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர்மோகன் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.