நக்கீரன் கோபால் காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் சிறைக் காவல் இந்த மாதம் 21ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி நக்கீரன் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில் கோபால் 180 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். பொடா சட்ட விதிகளின்படி அவர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், எங்கள் வசம் குற்றப்பத்திரிக்கை தயாராகவே உள்ளது என்றார்.
இதையடுத்து கோபாலின் சிறைக் காவலை நவம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.