எஸ்.ஆர்.பிக்கு மறதி அதிகமாகிவிட்டது: இளங்கோவன் பதிலடி
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு வயதாகி விட்டதால் மறதியும் அதிகமாகி விட்டது.காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகள் தெரியாமல் அவர் பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஜெயலலிதாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கட்சித் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம், தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிமோதலை பெரிதுபடுத்தியுள்ளது.
இளங்கோவன் நெருக்குதல் தந்ததாலேயே சோ.பா. அந்த நோட்டீஸை அனுப்பினார். இதையடுத்து வாசன்ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் போட்டி போட்டு பேட்டி கொடுத்து மோதி வருகின்றனர்.
நேற்று சட்டசபை காங்கிரஸ் தலைவரும் வாசன் கோஷ்டி பிரமுகருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்பேட்டியளிக்கையில், செயல் தலைவர் என்ற சட்ட விரோத பதவியில் உள்ள இளங்கோவன், காங்கிரஸ்எம்.எல்.ஏக்களுக்கு நோட்டிஸ் அனுப்புவது குறித்துப் பேச எந்த அதிகாரமும் கிடையாது என்று கூறியிருந்தார்.
இன்று இளங்கோவன் அதற்கு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சாதாரண விஷயம். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்றுதெரியவில்லை. எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சித் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது.
நான் செயல் தலைவராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று எஸ்.ஆர்.பி கூறுவது வேடிக்கையாகஉள்ளது. சில காலம் அவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. வேறு கட்சியில் (மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்)இருந்தார். அங்கு இருந்த காரணத்தால், காங்கிரஸ் கட்சியின் நடைமுறைகளை அவர் மறந்து போயிருக்கலாம்.அவருக்கு வயதாகி விட்டதால் மறதியும் வந்து விட்டது.
அகில இந்திய அளவில் கமலாபதி திரிபாதி அவர்கள் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டுள்ளார். அவர்திறம்பட செயல்பட்டதை உண்மையான காங்கிரஸார் அறிவார்கள். ஆனால் வேறு கட்சியிலிருந்து காங்கிரஸுக்குவந்ததால், இந்த நடைமுறையை எஸ்.ஆர்.பி. மறந்திருக்கலாம்.
நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏக்களும் சரியான முறையில் விளக்கம் அளித்தால், அது ஏற்கப்படக்கூடியதாக இருந்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். கட்சியில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications