பொடாவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டம் மிகவும் அவசியமானது. அதை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதாக்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொடா ஒரு அரசியல் பிரச்சினைஅல்ல. மாறாக தேசிய பிரச்சினை. பல விவாதங்களுக்குப் பிறகே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைநீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த விஷயத்தில் திமுக போர்க்கொடி உயர்த்தியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. பொடா விவகாரத்தில் தேசியஜனநாயகக் கூட்டணி அரசுடன் திமுக ஒத்துழைக்க வேண்டும்.
சமதாக் கட்சியும், ஐக்கிய ஜனதாதளமும் இணைந்துள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் பலம் மேலும் வலுவடையும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications