ஞாயிறு மாலை முதல் தென்னக ரயில்வே முன்பதிவு தாற்காலிக நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்னக ரயில்வேயின் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் வரும்ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் திங்களகிழமை காலை 8 மணி வரை செயல்படாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் ரிசர்வேசன் சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால் முன்பதிவுப் பணிகளும், கம்ப்யூட்டர்மூலமாக செய்யப்படும் விசாரணைகளும் (என்கொயரி) நிறுத்தி வைக்கப்படுகின்றன என தெனனக ரயில்வேஅறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் ரிசர்வேசன் முறை சுமார் 15 மணி நேரம் நடக்காது. இதை ஈடு செய்யஎன்கொயரிக்கும், கரண்ட் ரிசர்வேஷனுக்கும் கூடுதல் பணியாளர்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications