ரேசன் கார்டுகளில் எச் முத்திரை: காலக்கெடு முடிந்தது
சென்னை:
மாதம் ரூ. 5,000க்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களின் ரேஷன் கார்டுகளில் எச் முத்திரைப் பதிப்பதற்குகடைசி நாள் என்பதால், ரேசன் கடைகளிலும் உணவு வினியோகத்துறை அலுவலகங்களில் நேற்று மக்கள் கூட்டம்அலை மோதியது.
இந் நிலையில் மாதம் ரூ. 5,000க்கும் குறைவான வருமானம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை இன்று முதல்புதுப்பிக்க தொடங்கியுள்ளனர்.
மாத வருவாய் ரூ. 5000க்கும் அதிகம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாகமாற்றிக் கொள்வதற்கான காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. முத்திரை பதிக்காவிட்டால் கார்டுகள் பறிமுதல்செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
கடந்த மாதமே முடிவடைந்த காலக்கெடு மக்கள் கோரிக்கையையடுத்து இந்த மாதக் கடைசி வரைநீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி நாளான்று உணவுப் பொருள் வினியோக அலுவலகங்களில் மக்கள்ரேஷன் கார்டுகளுடன் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று எச் முத்திரையைப் பதித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரூ. 5,000க்கும் குறைவான வருமானம் கொண்டோர் தங்களது கார்டுகளை அடுத்த ஆண்டுடிசம்பர் மாதம் வரை நீட்டித்து புதுப்பித்துக் கொள்ளும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிறுஆகிய நாட்களில் இந்த புதுப்பித்தல் பணி நடைபெறும்.
மாநிலம் முழுவதிலும் மொத்தம் 10,000 மையங்களில் இந்த புதுப்பிக்கு பணி நடைபெறுகிறது.