For Daily Alerts
Just In
செம்மங்குடியின் கண்கள் தானம்: உடல் தகனம்
சென்னை:
மறைந்த கர்நாடக இசையுலகின் பிதாமகர் செம்மங்குடி சீனிவாச ஐயரின் கண்கள் சங்கர நேத்ராலாயாமருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டன.
செம்மங்குடி சீனிவாச ஐயர் நேற்று காலமானார். அவரது ஆசையின்படி அவரது கண்கள் சென்னை சங்கரநேத்ராலாயா மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டன.
உடல் தகனம்
பின்னர் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டஅவரது உடல் பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-தலைவர்கள் இரங்கல்:
அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன், பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன் உள்ளிட்டோர்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, November 1, 2003, 5:30 [IST]