திங்கள்கிழமை கூடுகிறது தமிழக சட்டசபை: அனல் பறக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை வரும் திங்கள்கிழமை கூடுகிறது.

அரசு ஊழியர் விவகாரம், பொடா கைதுகள், ரேசன் பொருள்கள் ரத்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து,மணிசங்கர் அய்யர் தாக்கப்பட்டது. வெங்கடேச பண்ணையார் எண்கெளன்டர் சாவு, புதிய தலைமைச் செயலககட்டிட விவகாரம், டி.ஆர். பாலு போடும் தடைகள், மதுக்கடைகளை அரேச நடத்தும் முடிவு என ஏகப்பட்டபிரச்சனைகள் குவிந்துள்ள நிலையில் சட்டமன்றம் கூடுகிறது.

இதனால் அதிமுகவுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நடக்கவுள்ளது. குறிப்பாக திமுகதலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸிட் கட்சிகள் ஒன்று திரள ஆரம்பித்துவிட்டதால் சட்டமன்றத்தில்கடுமையான அமளிக்கும் மோதலுக்கும் குறைவிருக்காது.

அரசைத் தாக்குவதில் திமுக அளவுக்கு பா.ம.க. தீவிரமாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.

பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பிரதமர்வாஜ்பாயை முதல்வர் கடுமையாக விமர்சிப்பார் என்று தெரிகிறது. வழக்கமாக அதிமுகவை ஆதரிக்கும் பா.ஜ.க.எம்.எல்..ஏக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

ராணி மேரிக் கல்லூரியை இடிக்க விடாமல் சட்டம் போட்ட மத்திய அமைச்சர் பாலுவை கடந்த சட்டமன்றக்கூட்டத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்போது அண்ணா பல்கலைக்கழகவளாககத்திலும் தலைமைச் செயலகம் கட்ட விடாமல் தடுக்கும் வகையில் பாலு புதிய உத்தரவு போட்டிருப்பதால்அவருக்கு இந்த முறையும் சட்டமன்றத்தில் சிறப்பு டோஸ் கிடைக்கலாம்.

ஒரு வார காலம் நடக்கவுள்ள இந்த சட்டமன்ற மழைக்காலத் கூட்டத் தொடரில் அனல் பறக்கப் போவது நிச்சயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+