For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தலைமை செயலகம் கட்டுவதை கைவிட இந்திய கம்யூ. கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணமே இல்லை என்று கூறி அரசு ஊழியர்களின் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,மின்சாரம், பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ரூ. 400 கோடி பணத்தில் புதிய தலைமைச் செயலகம்கட்டுவதை ஏற்கவே முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கமிட்டி கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசின் கஜானாவில் பணம் இல்லை என்று கூறும் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்தசலுகைகளை ரத்து செய்து விட்டது, ஊதிய உயர்வு கொடுக்கவில்லை.

மின்கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 400 கோடி பணத்தைசெலவழித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டுள்ளது ஏற்கவே முடியாதது. இந்தத் திட்டத்தைஉடனடியாக அரசு கைவிட வேண்டும்.

திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு ஆகியோர் மீது டெஸ்மா மற்றும் எஸ்மா சட்டத்தின் கீழ்தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

கெளரவ ரேஷன் கார்டுகளால் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது விநியோகசேவையிலிருந்து அரசு விலகுவதையே இது காட்டுகிறது. எனவே கெளரவ கார்டு திட்டத்தை அரசு வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X