திருச்சி: மூதாட்டியை கொன்று பல லட்சம் கொள்ளை
திருச்சி:
திருச்சி மாவட்டம் குமரப்பட்டி என்ற கிராமத்தில் வயதான பெண்ணைக் கொன்றும், இன்னொரு பெண்ணைக்காயப்படுத்தியும், பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது.
குமரப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு வேலை விஷயமாக சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில்இரவு பழனிச்சாமியின் வீட்டிற்கு 3 பேர் வந்துள்ளனர்.
கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மனைவி முத்துலட்சுமி, மாமியார்சொர்ணம் ஆகியோரைக் கத்தியால் குத்தினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த பட்டுச் சேலைகள், பல லட்சம் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை எடுத்து தாங்கள்கட்டியிருந்த வேட்டியில் சுருட்டிக் கொண்டு அக் கும்பல் தப்பியது.
படுகாயமடைந்த முத்துலட்சுமியும், சொர்ணமும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சைபலனின்று சொர்ணம் இறந்து விட்டார். முத்துலட்சுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications