மீண்டும் இலவச, வேட்டி சேலை
சென்னை:
பொங்கல் தினத்தன்று ஏழை விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்போருக்கு ரூ. 120 கோடிசெலவில் மீண்டும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருந்தது. இந் நிலையில் இன்று காலை தொடங்கிய சட்டசபைக்கூட்டத்தில் துணை நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்துப் பேசிய நிதியமைச்சர் பொன்னையன், பொங்கல்தினத்தன்று ரூ. 120 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.
81 லட்சம் பெண்களுக்கு பாலியஸ்டர் மற்றும் பருத்தியில் சேலைகளும், 84 லட்சம் பேருக்கு வேட்டியும்வழங்கப்படும். மொத்தம். 1.55 கோடி பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 20கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவையொட்டி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ 1.5 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும் என்றார் அவர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்: ஓ.பி. விளக்கம்
நிர்வாக அவசியம் காரணமாகவே பெரிய மாவட்டங்கள் மற்றும் வருவாய் கோட்டங்கள் பிரிக்கப்படுகின்றனஎன்று வருவாய் மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளிக்கையில், பெரிய மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள் நிர்வாகஅவசியம் காரணமாகவே பிரிக்கப்படுகின்றன. தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து கிருஷ்ணகிரியைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், நாடாளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைக்கும் நடைமுறை முடியும் வரை மாவட்டப் பிரிவினையைமேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
எனவே, இப்போதைக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முடியாத நிலை உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications