For Daily Alerts
Just In
வந்தார், கையெழுத்திட்டார், சென்றார் கருணாநிதி
சென்னை:
இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் மழைகாலக் கூட்டத் தொடரிலும் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. சட்டமன்ற வளாகம் வரை வந்த அவர் உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுதிரும்பிச் சென்று விட்டார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது முதல் கருணாநிதி சட்டசபைக் கூட்டத் தொடல் கலந்து கொள்ளாமல்புறக்கணித்து வருகிறார். ஒரே ஒரு முறை மட்டுமே அவர் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதுவும் வந்தஉடனேயே கிளம்பிச் சென்று விட்டார்.
உறுப்பினர் பதவியை காப்பாற்றிக் கொள்ள 6 மாதத்துக்கு ஒரு முறையாவது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றபதிவேட்டில் யைெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் பதவி பறிபோய்விடும். இதனால் கருணாநிதி இன்றுகையெழுத்திட்டார். அவை தொடங்குவதற்கு ஒன்றேகால் மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துகையெழுத்திட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, November 3, 2003, 5:30 [IST]