பஸ் ஸ்டாப்பிற்குள் பாய்ந்த டேங்கர் லாரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

The rammed lorry at bus stopசென்னை கே.கே.நகர் பகுதியில் தாறுமாறான வேகத்தில் வந்த டேங்கர் லாரி, பஸ் ஸ்டாப்பிற்குள் புகுந்து,கூரையை தகர்த்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை நகரில் தண்ணீர் ஏற்றி வரும் டேங்கர் லாரிகளின் தொல்லை தாள முடியவில்லை. சாலைகளில்நிம்மதியுடன் வாகனங்களில் செல்ல முடியவில்லை. அந்த லாரி வந்தாலே சாலையோரம் நடக்கக் கூட மக்கள்அஞ்சுகின்றனர்.

தமிழகத்தில் தினசரி சராசரியாக 2 பேர் வரை டேங்கர் லாரிகளில் அடிபட்டு இறப்பது வாடிக்கையாகி விட்டது.இந் நிலையில் நேற்று பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் தண்ணீர் லாரி ஒன்று படு வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்பார்த்த அப் பகுதிவாசிகள் யார் மீது மோதப் போகிறதோ என்று பயத்துடன் அலறி ஓடினர். தாறுமாறாக ஓடியஅந்த லாரி சாலையோரம் இருந்த பஸ் நிறுத்தத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ் நிறுத்தக் கூரை இடிந்து, பெயர்ந்து விழுந்தது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்த ஜோதி மணி என்பவர்படுகாயமடைந்தார்.

லாரி மோதிய பஸ் நிறுத்தக் கூரை பாழடைந்து இருந்ததால், அதன் கீழ் நிற்காமல் அருகில் உள்ள புதிய பஸ்நிறுத்தத்தில் தான் பெரும்பாலான பயணிகள் காத்திருந்தனர். இதனால் பெரும் உயிழப்பு தவிர்க்கப்பட்டது.

மோதிய உடனேயே லாரி டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர். கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+