திருமணமான பெண்ணை நிர்வாணமாய் படமெடுத்து மிரட்டிய காபி தோட்ட மேலாளர்
சேலம்:
திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஏற்காடு மலையில் உள்ள காபித்தோட்டத்தின் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
தோட்டத்தில் வேலை செய்து வந்த அந்தப் பெண்ணை முதலில் மிரட்டி செக்சில் ஈடுபடுத்திய அந்த நபர், பின்னர்அந்தப் பெண்ணை நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் படங்ளைக் காட்டி மிரட்டியே தொடர்ந்து பாலியல்ரீதியில் தொல்லைப்படுத்தி வந்துள்லர்.அவரது செக்ஸ் தொல்லையைப் பொறுக்க முடியாத அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்றிரவு அந்த மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்திலேயே நேற்று இன்னொரு கற்பழிப்பு வழக்கும் பதிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 18 வயதுபெண் நேற்றிரவு தனது அவரது வீட்டில் தனியே இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் பலாத்காரம்செய்தார்.
இதையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.












Click it and Unblock the Notifications